விருத்தாசலம்: மாசிமக திருவிழாவை ஒட்டி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணிமுத்தாற்றில் வீசப்பட்ட டன் கணக்கிலான நெகிழி குப்பைகளால் ஆறு பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மாசிமக திருவிழாவை ஒட்டி பல்லாயிரகணக்கானோர் மணிமுத்தாற்றில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதற்காக கடைகளில் நெகிழி பையில் பொருட்கள் வாங்கிவந்து வழிபாடு முடித்துவிட்டு பையை ஆற்றில் வீசி சென்றுள்ளனர். இதனால் மணிமுத்தாற்றில் டன் கணக்கிலான நெகிழி குப்பைகள் குவிந்துள்ளன. எனவே போர்க்கள அடிப்படையில் ஆற்றிலிருந்து நெகிழி குப்பையை அகற்றி நீநிலையை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.